English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | பசுமைமாறாமரம் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வழுவழுப்பானது, சாம்பல் நிறமானது; உள்பட்டை சிவப்பு கலந்த அரக்கு (ப்ரவுன்). |
இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1-1.3 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 5-10 X 2.5-3 செ.மீ., நீள்வட்டம் அல்லது நீள்சதுர வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் மழுங்கியது அல்லது ஆப்பு வடிவம், அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ்; மையநரம்பு அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது. |
மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஒர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் சிறிய மஞ்சரி காம்புடைய சைம், காம்பற்றவை அல்லது சிறிய காம்புடையது, செழுமையற்ற சூலகம் கொண்டது; பெண்மலர்கள் இலைக்கோணங்களில் தொகுப்பாக காணப்படுபவை, செழுமையற்ற மகரந்ததாள்களுடையது. |
கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோளவடிவானது, சிவப்பு முதல் பர்புள் நிறமானது; 4 அறைகளுடையது, ஒவ்வொரு அறையிலும் 1 விதை காணப்படும். |