English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
வளரியல்பு : | பசுமைமாறாமரங்கள், 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் தண்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒழுங்கான வளையமானது; மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது. |
இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 12 X 4 செ.மீ.,நீள்சதுர வடிவானது, அலகின் நுனி மழுங்கிய அதிக்கூரியது, அலகின் தளம் வட்டம் அல்லது கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது. |
மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரிகள் தனித்தவை அல்லது இரட்டை மலர்களாக இலைக்கோணங்களில் இலை உதிர்ந்த பின் காணப்படுகின்றன; மலர்காம்பு 2.5 செ.மீ. நீளமுடையது, உரோமங்களற்றது; அல்லி இதழ்கள் வெள்ளை நிறமானது. |
கனி / விதை : | கனி கோளவடிவானது, 2 X 1.7 செ.மீ. இருபிளவுகளுடையது, நுனி கூரியது, ஒர் விதையுடையது. |