English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
வளரியல்பு : | பசுமைமாறாமரம் 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல்-ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை சிவப்பு நிறமானது. |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சிறிது கோணங்களுடையது, முதிரும் போது வளையமானது, உரோமங்களற்றது. |
இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 8.5-16 x 3-6 செ.மீ., ஈட்டி வடிவானது, நீள்வட்ட வடிவானது அல்லது தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் மெட்டையானது, அலகின் தளம் அட்டனுவேட் அல்லது டெக்கரண்ட், அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டோசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 10-13 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை. |
மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி கோள வடிவமானது சீரமஞ்சரி, தண்டின் நுனியில் காணப்படும்; மலர்கள் காம்பற்றது, மஞ்சள் நிறமானது வெள்ளை நிறமானது. |
கனி / விதை : | 2-அறைகளுடைய பைரீன், சதைப்பற்றான கோள வடிவமான அமைப்பில் அமைந்தவை; விதைகள் முட்டை வடிவானது, ஒவ்வொரு அறையிலும் சில விதைகளுடையது. |